Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

Mahendran
சனி, 5 அக்டோபர் 2024 (16:56 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ. எஸ். மணியன் தற்போது வேதாரண்யம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் நிலையில், நேற்று அவர் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் அவருடைய காரின் குறுக்கே வந்தது. வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது, அருகிலிருந்த அம்மன் கோவில் ஒன்றின் சுற்றுச்சுவரில் மோதியதால் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பக்கம் சிறிய அளவில் சேதமடைந்ததுடன், முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன், ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆகியோர் சிறு காயங்களோடு உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments