Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
, வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:44 IST)
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை 8.30 மணி அளவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்றும், பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 
 
அதே போல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் போக்குவரத்து பிரச்சனை இருந்து வந்தது. விழா காலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும் போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் அதே போல்தான் கூடுதல் பேருந்துகள் தேர்தலுக்கு வாக்களிக்கும் செல்லும் வாக்காளர்களுக்காக விடப்பட்டது. ஒரே நாளில் பொது மக்கள் செல்வதால் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. திருப்பி செல்பர்களுக்கு இது போல் பிரச்சனை இருக்காது என்று தெரிவித்தார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய மக்களவை தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு - தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசத்தில் என்ன நிலைமை?