Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் அதிமுக பெண் வேட்பாளர்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (12:35 IST)
பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் அதிமுக பெண் வேட்பாளர்!
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வினோதமான நடவடிக்கைகளின் மூலம் வாக்குகளை கேட்டு வருகிறார்கள் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் அதிமுக பெண் வேட்பாளர் ஒருவர் துடைப்பத்தை எடுத்து பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்குகள் கேட்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்களுடன் பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஈடுபட்டுவந்தார் 
 
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று ஒரு பள்ளி அருகே வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அந்த பள்ளியை சில பெண்கள் துடைப்பத்தால் தூய்மை படுத்திக் கொண்டிருந்தனர். உடனே ஒரு பெண்ணின் துடைப்பத்தை கையில் வாங்கிய அவர் பெண்களோடு பெண்களாக அவரும் பள்ளியை தூய்மைப்படுத்தினார். அதன்பிறகு அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் வாக்கு கேட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments