நீலகிரியில் அதிமுக – பாஜக பிரமுகர்கள் கைகலப்பு! போலீஸ் வழக்குப்பதிவு! – தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 26 மார்ச் 2024 (10:34 IST)
நீலகிரியில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றபோது அதிமுக – பாஜகவினர் கைகலப்பில் ஈடுபட்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மார்ச் 20ம் தேதி முதலாக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று முதலாக பரபரப்பாக நடந்து வருகிறது.

சில இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இரு வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் வந்துவிடுவதால் வாக்குவாதங்களும், மோதலும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக நீலகிரியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாஜக – அதிமுகவினர் இடையே கைகலப்பு எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்த நிலையில் போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.

ALSO READ: களைகட்டும் தேர்தல் திருவிழா.. நேற்று ஒரே நாளில் 350 வேட்பு மனுக்கள் தாக்கல்!

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பரப்புரை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் காவல்துறை வாகனத்தை தாக்கியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments