Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: தமிழக அரசு திட்டம்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (12:42 IST)
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினமும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுக ஆட்சியில் சித்திரை 1ஆம் தேதியும் திமுக ஆட்சியில் தை 1ஆம் தேதியும் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் எந்த நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்
 
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மாறிய நிலையில் மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
இது குறித்து அரசாணையும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆண்டாண்டு காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அதிலிருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments