Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: தமிழக அரசு திட்டம்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (12:42 IST)
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினமும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுக ஆட்சியில் சித்திரை 1ஆம் தேதியும் திமுக ஆட்சியில் தை 1ஆம் தேதியும் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் எந்த நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்
 
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மாறிய நிலையில் மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
இது குறித்து அரசாணையும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆண்டாண்டு காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அதிலிருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

மோடி ஆட்சிக்கு வந்தால் ரயில் டிக்கெட் கன்பர்ம் .. வெயிட்டிங் லிஸ்ட்டே கிடையாது: ரயில்வே அமைச்சர்

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்.! எங்கெல்லாம் தெரியுமா.?

பாஜகவின் ‘பி டீம்’தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி: காங்கிரஸ் எம்.பி பேட்டி

பெண்களுக்கு மட்டுமே வேலை..! சட்டத்துக்கு எதிரானது..! உயர்நீதிமன்றம் கருத்து..!!

நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்.. பாஜக கூட்டணியில் போட்டி.. வெற்றி கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments