Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு
, சனி, 28 ஜனவரி 2017 (15:47 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை அடுத்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் மீண்டும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


 

 
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அறவழி போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
போராட்டத்தின் இறுதி நாளில் கலவரத்தில் ஈடுப்பட்டதாக 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் மெரீனாவில் கூடி போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிற்பகல் முதல் மெரீனாவில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தேசவிரோதிகள்: நிர்மலா சீதாராமன்