Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..

Arun Prasath
புதன், 23 அக்டோபர் 2019 (09:31 IST)
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பியது. அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் சேலம், தஞ்சாவூர், ஈரோடு, உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது. இது இந்த இரண்டு மாதங்களில் மூன்றாவதாக எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments