சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது வழக்குப்பதிவு

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (09:20 IST)
சிறுமுகை காரப்பன் சிக்ஸ் உரிமையாளர் காரப்பன் என்பவர் சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசிய போது கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். காரப்பன் கூறிய இந்த கருத்துக்கு பாஜக பிரமுகர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்துக்கள் யாரும் அவரது கடையில் துணிகள் வாங்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காரப்பன் சில்க்ஸ் கடைக்கு ஆதரவு கொடுப்போம் என டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காரப்பன் அவர்கள் இந்து மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனையடுத்து காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது 2 பிரிவுகளில் கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மத உணர்வை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments