Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு அந்தமான் பகுதியில் மீண்டும் புயலா? தாங்குமா தமிழ்நாடு?

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:57 IST)
தெற்கு அந்தமான் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் புயல் உருவாகும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது என்பதும் அதனால் சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் கனமழை பெய்தது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழு தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் இது புயலாக மாறுமா என்பதை ஓரிரு நாட்கள் கழித்தே தெரியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments