Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவள்ளூரில் மீண்டும் டெங்கு: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூரில் மீண்டும் டெங்கு: மாவட்ட ஆட்சியர் தகவல்
, ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:56 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 

 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார். 
 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விட்டு வெளியே வந்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது.
 
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக அவர் கூறினார். மேலும், வைரஸ் காய்ச்சல் காரணமாக 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் டெங்கு அறிகுறியால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிணற்றில் கண்டுபிடிப்பு