Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி உத்தரவிட்ட நிலையிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை.. தீராத பிரச்சனை..!

Webdunia
புதன், 31 மே 2023 (07:57 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் ஒவ்வொரு மதுபானத்தின் விலைப்பட்டியல் கடை முன் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் விற்பனையாளர் மற்றும் மேனேஜர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த டாஸ்மார்க் கடை ஒன்றில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்பனையாளர் விற்பனை செய்ததை தட்டி கேட்ட குடிமகன் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
செந்தில் பாலாஜி கூறினாலும் கூடுதல் விலைக்கு தான் விற்போம் என்றும் மது பாட்டலுக்கு பில் தர முடியாது என்றும் அவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் பெற்று வருவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குடிமகன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments