Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை செய்தும் வெளியேற மறுத்த பாரதிராஜா: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:21 IST)
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டம் செய்தனர் என்பதும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பாரதிராஜாவை சற்றுமுன் காவல்துறையினர் விடுதலை செய்தனர். ஆனால் தன்னுடன் கைதான சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே வெளியே செல்வேன் என்று பாரதிராஜா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இன்று சீமான் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாரதிராஜா விடுதலை செய்யப்பட்டும் வெளியேற மறுத்ததால் அந்த திருமண மண்டபத்தில் பதட்டநிலை  உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்