Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்: கமல் டுவீட்

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் இன்று தனது இரண்டு மகள்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து இன்று காலை வாக்குப் பதிவு செய்தவுடன்  தான் போட்டியிடும் கோவை தொகுதிக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவை தெற்கு தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அவர் வாக்கு பதிவை ஆய்வு செய்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுப்பது குறித்து ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்றும் கூறினார் இதன் பின்னர் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments