Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் பெற்றோர் பிணம். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

வீட்டில் பெற்றோர் பிணம். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி
, திங்கள், 6 மார்ச் 2017 (23:09 IST)
மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் - சுமதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகளாக பிறந்த அமிர்த கெளரி என்ற மாணவி தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். இன்று அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுத உள்ள நிலையில் அவரது பெற்றோர்களான முருகேசன் - சுமதி தம்பதியினர் நேற்று மாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர்.




வீட்டில் பெற்றோர்களின் பிணம் இருந்தாலும், தன்னுடைய பெற்றோர்கள் தான் ஒரு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கண்ட கனவை நனவாக்க பெற்றோர் இழந்த துக்கத்துடன் பள்ளிக்கு சென்று அமிர்த கெளரி தேர்வு எழுதினார்.

அமிர்த கெளரிக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறிய காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள் ஃபேஸ்புக்கில் பிரபலமா? அப்ப இதை படியுங்கள்