Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:29 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதையும் கிலோ ரூபாய் 80 முதல் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வெங்காயத்தை அடுத்து உருளைக்கிழங்கு விலையும் ஏறி வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உருளைக்கிழங்கின் அளவு வெகுவாக குறைந்தது. இதுவே உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தின் காரணமாகும்
 
ஒருசில நாட்களுக்கு முன் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாய் வரை விற்பனை ஆவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு தான் சமையலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இரண்டுமே விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் சிரமத்தில் உள்ளன 
 
வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விலையை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க என கோரிக்கை விடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments