Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்மல் குமாரை அடுத்து மேலும் ஒரு பாஜக பிரபலம் விலகல்.. என்ன நடக்குது அண்ணாமலை?

நிர்மல் குமாரை அடுத்து மேலும் ஒரு பாஜக பிரபலம் விலகல்..  என்ன நடக்குது அண்ணாமலை?
, திங்கள், 6 மார்ச் 2023 (17:27 IST)
பாஜகவில் இருந்து நேற்று ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் விலகினார் என்பதும் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
பாஜகவின் முக்கிய பிரபலம் ஒருவர் அதிமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் திலீப் கண்ணன் என்பவரும் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??..... இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.
 
 பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய பிரபலங்கள் விலகிக் கொண்டிருப்பதை அடுத்து அண்ணாமலை அக்கட்சியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தொண்டர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது: அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்!