Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரை அடுத்து ஈரோடு வேட்பாளரை அறிவித்த சீமான்.. பெண் வேட்பாளர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:57 IST)
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன
 
ஏற்கனவே தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கரூரில் நடந்த கூட்டத்தில் கரூர் தொகுதியின் பாராளுமன்ற வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.  
 
தேர்தல் அறிவிப்புகள் வரும் முன்பே வேட்பாளரை சீமான் அறிவித்த பரபரப்பு நீங்கும் முன்பே ன்று மீண்டும் ஈரோடு தொகுதியின் வேட்பாளரை அவர் அறிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு  தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி என்று அறிவித்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் இதை அறிவித்துள்ள நிலையில் ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments