Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு.. மேல்முறையீடு குறித்து ஆலோசனையா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:59 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பொன்முடி சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார். 
 
இந்த ஆலோசனையின் போது அவர் மேல்முறையீடு குறித்து பேசி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நேற்று வெளியான தண்டனை குறித்து அறிவிப்பு வெளியான பின் முதல் சந்திப்பு இது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிந்தது.  அதேபோல் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments