Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (16:16 IST)
சென்னையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 100 மில்லி மீட்டர் மழை பெய்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் திடீரென இன்று மழை பெய்தது. சில நிமிடங்கள் பெய்தாலும், மழை நீர் பல இடங்களில் தேங்கியிருப்பதாகவும், இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும், தற்போது மேக கூட்டங்கள் சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், ஈசிஆர் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்பு, சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி 100 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட அதே நாளில், அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி 100 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments