Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் நீதிபதியை காதலிப்பதாக டார்ச்சர்.. வழக்கறிஞர் மீது அதிரடி நடவடிக்கை..!

Advertiesment
பெண் நீதிபதியை காதலிப்பதாக டார்ச்சர்.. வழக்கறிஞர் மீது அதிரடி நடவடிக்கை..!

Mahendran

, புதன், 30 அக்டோபர் 2024 (17:00 IST)
பெண் நீதிபதியை காதலிப்பதாக துன்புறுத்திய வழக்கறிஞரை பார் கவுன்சில் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நீதிபதிக்கு, வழக்கறிஞர் சிவராஜ் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். அந்த நீதிபதி தினமும் பணியாற்றும் நீதிமன்றத்திற்கு சென்று அவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கத்தை முன்னெடுத்துள்ளார். 
 
அவ்வப்போது பெண் நீதிபதியின் நடவடிக்கைகளிலும் குறுக்கிடும் போக்கைக் காட்டியுள்ளார். பெண் நீதிபதி தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு சென்றபோதும் அவர் அங்கு சென்று தொல்லை கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையை உணர்ந்து, பெண் நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, வழக்கறிஞர் சிவராஜிற்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருந்தும், அவர் தனது செயல்களை நிறுத்தவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சிவராஜ் நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாதம் ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’: ஆஸ்திரேலியா அறிவிப்பு