Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!

வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:50 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 
 
சென்னையில் நேற்று போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்க்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடப்பழினி ஆகிய இடத்தில் வன்முறை வெடித்தது.
 
இந்த வன்முறையின் போது போலீசார் சிலரே ஆட்டோ, குடிசைகளுக்கு தீ வைத்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் பாலு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை காலை வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments