Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை.. தமிழக அரசு முடிவு..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (08:41 IST)
இந்த மாதம் மகளிர் உதவி தொகை 1000 ரூபாய் முன்கூட்டியே வரவு வைக்க  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உதவி தொகையாக ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாதம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், முன்கூட்டியே அதாவது ஜனவரி 10ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பொங்கல் கொண்டாடும் மக்கள் செலவுக்கு அந்த பணம் உதவும் என்பதாலும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு  விடுமுறை ஆகும். எனவே ஜனவரி 10ஆம் தேதியே இந்த மாதம் மகளிர் உரிமை தொகையை வழங்கிவிடலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, அனைத்து மகளிர் உரிமை தொகையை பெறுபவர்கள், இந்த மாதம் மட்டும் 10ஆம் தேதியே அவர்களது வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், பொங்கல் கொண்டாடும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி சரணாலயம்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தமிழ்நாடு முழுவதும் ஆட்டுக்கறி ஒரே விலையில்..! - தமிழ்நாடு அரசு திட்டம்!

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments