நீட் விவகாரத்தில் திமுகவுக்கு அதிமுக துணை நிற்கும் - விஜயபாஸ்கர் பேட்டி

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (12:33 IST)
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி. 

 
நீட்தேர்வு எதிர்ப்பை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசியதாவது, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார் என்றார்.
 
மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments