Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் சுர்ஜித் மரணம் – ஊடகங்களிடம் பேச அமைச்சர்களுக்குத் தடை !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:12 IST)
திருச்சி அருகே சிறுவன் சுர்ஜித் மரணம் அடைந்தது தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அதிமுக தலைமை அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளது.
 

அரசின் போதிய அறிவியல் கருவிகள் இல்லாத காரணமும் குழந்தையின் இறப்புக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிமுக தலைமையில் இருந்து அமைச்சர்களுக்கு வாய்வழி உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அமைச்சர்கள் யாரும் சிறுவன் மரணம் தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

பேனர் விவகாரத்தில் அதிமுக அமைச்சர் பொன்னையனின் சர்ச்சைப் பேச்சு, நாங்குநேரி இடைத்தேர்தலில் ராஜேந்திர பாலாஜியின் சிறுபான்மையினருக்கு எதிரானப் பேச்சு ஆகியவற்றால் மக்கள் அதிமுக மீது கோபத்தில் உள்ளனர். அதனால் இம்முறையும் எதாவது சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments