தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது, உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்நில்லையில், முதல்வர் உடல்நலம் பெற அதிமுக நிர்வாகி ஒருவர் விருத்தாச்சலத்தில் தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவர், தன்னுடைய வீட்டின் முன்பு, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தபோது, ”அம்மா வாழ்க, அம்மா வாழ்க” என கத்தியவாறு ஓடி வந்து சுருண்டு விழுந்துள்ளார்.
அவரை, அக்கம்பக்கத்தினர் வந்து, வந்து மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
படுகாயமுற்ற நிலையில் சிகிச்சை எடுத்து வரும் அவர், விருத்தாச்சலம் ஒன்றிய துணை செயலாளர் கணேசன் என் தெரியவந்துள்ளது.