Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டிய அதிமுக தொண்டர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (17:28 IST)
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக அதிமுக தொண்டர் ஒருவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற கை விரல் ஒன்றை வெட்டியுள்ளார்.
 

 
 
 
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா பெறாதா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு எதிராகவே வந்தது. இந்நிலையில் தங்கராஜ் (50) என்ற தீவிர அதிமுக தொண்டர் ஒருவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் தனது விரலை வெட்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக  ராசிபுரம் அருகேயுள்ள முனியப்பன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார்.
 
இந்நிலையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ள நிலையில் தங்கராஜ் தனது வேண்டுதலை செலுத்த இன்று காலை ராசிபுரம் முனியப்பன் கோவிலுக்கு தனது நண்பருடன் வந்துள்ளார். தனது இடது கை சுண்டு விரலை வெட்டிக்கொண்டார் அவர்.
 
துண்டான தங்கராஜின் விரல் கையில் இருந்து விழாமல் தொங்கியவாறு இருந்துள்ளது. இதனை பார்த்த அவரது நண்பர் ராஜா, தங்கராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments