கிருஷ்ணசாமியுடன் டீலிங்: ப்ரைன் வாஷ் செய்ய அதிமுக ப்ளான்!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:13 IST)
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எனவே, கிருஷ்ணசாமியுடன் ஆதரவு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார். 
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு அளிக்கவில்லை என கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எனவே, கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 
இந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளிக்கப்பட்டால் கிருஷ்ணசாமி ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments