Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – அதிமுக ஆதரவு !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (09:22 IST)
மோடி அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக அதிமுக சட்ட அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மோடி அறிவித்துள்ள ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று நடந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் அதிமுக சார்பால ஓ பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமிதான் கலந்து கொள்ள முடியும். இதனால்  சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தங்கள் கட்சியின் கருத்துகளை கடிதம் வாயிலாக அளித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வமாக அறிக்கை அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments