Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்மதி, கோகுல இந்திராவுக்கு பதவி: அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக நியமனம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (13:03 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் 12 பேரை அறிவித்துள்ளனர்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேச வேண்டாம், அதிகாராப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் யாரையும் இதுவரை நியமிக்கவில்லை என அறிவிப்பு வெளியானது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிமுகவின் கொள்கைகள், தலைமைக் கழக முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு வழங்கும் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல், மகேஸ்வரி, ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் ஆகிய 12 பேர் இனி வரும் காலங்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments