அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிப்பு

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (18:26 IST)
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டதாகவும், அதிமுக ஊராட்சி கழக செயலாளர்களின் பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌பிரிவுச்‌ செயலாளர்‌ மற்றும்‌ துணை நிர்வாகப்‌ பொறுப்புகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ அனைவரும்‌ இன்று முதல்‌ அவரவர்‌ வகித்து வரும்‌ பொறுப்புகளில்‌ இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்‌. கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌ பிரிவின்‌ நிர்வாக வசதியைக்‌ கருத்தில்‌ கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மண்டலம் பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
 
சென்னை மண்டலம்‌
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்‌
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்‌
வட சென்னை தெற்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை வடக்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை தெற்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ கிழக்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மத்திய மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மேற்கு மாவட்டம்‌
திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் முடிய போகிற நேரத்தில் கச்சா எண்ணெயை வாங்கி குவிக்கும் இந்தியா.. குழப்பத்தில் உலக நாடுகள்..!

ஏப்ரல் 2ம் தேதி பிரச்சாரத்தை துவங்கும் முக ஸ்டாலின்!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!..

இனிமே வண்டி நிக்காது!.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்?!..

கரெக்ட் டைமுக்கு போவாரா விஜய்?.. ஒரே நாளில் 5 தொகுதிகளில் பிரச்சாரம்!.

ஆகாஷ் வீட்டுக்கு ஏன் போகல?. உலக நடிப்புடா சாமி!.. அன்பில் மகேஷை ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments