Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிப்பு

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (18:26 IST)
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டதாகவும், அதிமுக ஊராட்சி கழக செயலாளர்களின் பொறுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌பிரிவுச்‌ செயலாளர்‌ மற்றும்‌ துணை நிர்வாகப்‌ பொறுப்புகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ அனைவரும்‌ இன்று முதல்‌ அவரவர்‌ வகித்து வரும்‌ பொறுப்புகளில்‌ இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்‌. கழக தகவல்‌ தொழில்நுட்பப்‌ பிரிவின்‌ நிர்வாக வசதியைக்‌ கருத்தில்‌ கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மண்டலம் பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
 
சென்னை மண்டலம்‌
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்‌
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்‌
வட சென்னை தெற்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை வடக்கு மாவட்டம்‌
தென்‌ சென்னை தெற்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ கிழக்கு மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மத்திய மாவட்டம்‌
காஞ்சிபுரம்‌ மேற்கு மாவட்டம்‌
திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments