விருப்பமனு கொடுக்கும் தேதியை திடீரென குறைத்தது அதிமுக!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:41 IST)
அதிமுகவில் விருப்ப மனு கொடுக்கும் தேதி திடீரென குறைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. திமுக உள்பட மற்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற்று விட்டு நேர்காணலை தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுகவில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 5ஆம் தேதிக்குள் விருப்பமனுவை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி இரண்டு நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது
 
இதன்படி மார்ச் 3ஆம் தேதி தான் விருப்பமனு கொடுக்க கடைசி தினம் என்றும் அன்றைய தேதிக்குள் தமிழ்நாடு புதுச்சேரி கேரளாவில் போட்டியிட விரும்பும் மனு வாங்கியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமனு கொடுக்கும் தேதி இரண்டு நாள் குறைக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் ரே அறையில் இளம்பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த டிரைவர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

போர் குறித்து டிரம்பிடம் எந்தவித திட்டமிடலும் இல்லை.. பின்லேடனை வேட்டையாடிய முன்னாள் சிஐஏ இயக்குனர் விமர்சனம்..!

இனிமே இருக்கு உங்களுக்கு!.. ஊழல் லிஸ்ட் என்கிட்ட இருக்கு!.. திமுகவை மிரட்டும் வேல்முருகன்!...

இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments