Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (16:42 IST)
தமிழக முழுவதும் ஜூலை 20ஆம் தேதி அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கலந்து சில நாட்களாக விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தக்காளி விலை 150 ரூபாய் விற்பனையாகி வருவதாகவும் சின்ன வெங்காயம் விலை 200க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாகவும் சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

பேனரில் ஜெயலலிதா புகைப்படம்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக ஆதரவு.?

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments