Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கிட்ட பதில் சொல்ல முடியாது! – பெண் காவலரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (10:35 IST)
கள்ளக்குறிச்சியில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்ததோடு பெண் காவலரிடம் தகறாரு செய்த அதிமுக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய செயலாளரான கதி தண்டபாணி சேலம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுள்ளார்.

சுங்கசாவடி அருகே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரிடம் அனுமதி சீட்டு இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்ததால் ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது? என பெண் காவலர் கேட்டதற்கு “உன்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என அவரை திட்டிவிட்டு வேகமாக காரில் சென்றுவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments