Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ.விற்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஜெ.விற்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஜெ.விற்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்
, வியாழன், 20 அக்டோபர் 2016 (12:22 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டதில் வேதனை அடைந்து, கும்பகோணத்தில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 

 
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்களும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
 
ஒருபுறம், முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி, தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் பிரார்த்தனைகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மறுபுறம், முதல்வருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், வேதனை அடைந்து, சில தொண்டர்கள் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரின் மகன் மோகன்குமார், கடந்த 13ம் தேதி, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
 
உடலில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு மரணமடைந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் பேய் மிளகாய் அமெரிக்கருக்கு தொண்டையில் ஓட்டை!