Publish Date: Wed, 30 Sep 2020 (14:33 IST)
Updated Date: Wed, 30 Sep 2020 (14:35 IST)
அதிமுக செயற்குழு கூட்ட விவாதத்தை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அதிமுக அமைச்சர்கள் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் குறித்து 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது தேதி தள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக கட்சியில் முதல்வரை விட பொது செயலாளருக்கே அதிக அதிகாரங்கள் உண்டு என கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் பொதுசெயலாளராக அவரிடம் அமைச்சர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.