Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேள்வி கேட்ட நிருபர்களை விரட்டிய அதிமுக அமைச்சர்

கேள்வி கேட்ட நிருபர்களை விரட்டிய அதிமுக அமைச்சர்

கேள்வி கேட்ட நிருபர்களை விரட்டிய அதிமுக அமைச்சர்
, திங்கள், 30 மே 2016 (13:11 IST)
போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டென்சனாகி நிருபர்களை அதிமுக அமைச்சர் விளாசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோட்டில் மேம்பாலம்,  ரிங் ரோடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
 
அப்போது, நிருபர்கள் சில நிருபர்கள் அவரை இடைமறித்து, பவானியில் புகழ்பெற்ற கைத்தறி ஜமுக்காலம், அந்தியூர் பகுதிகளில் நெசவு செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என சொல்லும் போது இடை மறித்த அமைச்சர் கருப்பண்ணன், யாரோ 2 கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் நடத்தயது எல்லாம் போராட்டமா, நானும் இங்கேதான் இருக்கேன். எந்த போராட்டமும் நடைபெறவில்லை. இது எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை என டென்சனாகி டீயை குடித்துவிட்டு கிளம்புங்கய்யா என அன்புக்கட்டளையிட்டுள்ளார்.
 
அமைச்சரின் திடீர் டென்சன் அறிந்து அதிர்ந்து போன நிருபர்கள் அமைதியாக வெளியேறிவிட்டனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவன் (வீடியோ)