Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பி.எஸ்-ஸும், மு.க.ஸ்டாலினும் கூட்டு சதி - ஜெயக்குமார் விளாசல்

ஓ.பி.எஸ்-ஸும், மு.க.ஸ்டாலினும் கூட்டு சதி - ஜெயக்குமார் விளாசல்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (14:17 IST)
அதிமுகவை அழிப்பதற்காக ஓ.பி.எஸ், திமுகவுடன் சேர்ந்து செயல்பட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் இந்த போராட்டத்துக்கு மக்கள், இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
 
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் ஹைட்ரோ கார்பன் திட்டமானது விவசாயத்தை பாதிக்காத வண்ணம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படும் எனக் கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது ஜெயக்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்னவோ அதுதான் என்னுடைய முடிவும். அந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என நான் கூறியதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை” என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அதிமுகவை அழிப்பதற்காக, ஓ.பி.எஸ் திமுகவுடன்  இணைந்து செயல்பட்டார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டு ஏதோ பனியன் விளம்பரம் போல் நடித்தார் மு.க.ஸ்டாலின். மக்கள் திமுகவை நம்பவில்லை” என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படப்போவதில்லை' - ஜெ.தீபா அதிரடி