Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது..! – நீதிமன்றத்தில் புதிய மனு!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:00 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் 28ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்பட்டால் அது கட்சியில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை மேற்கூறிய காரணங்களால் தடை செய்ய வேண்டும் என பெருந்துறை அதிமுக முன்னாள் இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments