Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது
, புதன், 15 ஜூன் 2016 (16:20 IST)
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.


 

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் விஜயமாலா. இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்ரை அளித்தார். அதில், எங்கள் பகுதியில் வசிப்பவர் சரவணன். அதிமுக பிரமுகரான இவரும் நானும் காதலித்துவந்தோம். என்னை திருமணம் செய்வதாக கூறியதால்  நெருங்கி பழகினேன். தற்போது நான் கர்ப்பம் அடைந்தேன். இதனால் என்னை திருமணம் செய்யுமாறு சரவணனிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்தார். மேலும் கர்ப்பத்தை கலைக்குமாறு மிரட்டினார். என்னை ஏமாற்றிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி சரவணன், விஜயமாலாவை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கணக்கு பலிக்குமா? திமுக தரப்பு கொடுக்குமா?: இது உள்ளாட்சி தேர்தல் விவகாரம்