Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கணக்கு பலிக்குமா? திமுக தரப்பு கொடுக்குமா?: இது உள்ளாட்சி தேர்தல் விவகாரம்

காங்கிரஸ் கணக்கு பலிக்குமா? திமுக தரப்பு கொடுக்குமா?: இது உள்ளாட்சி தேர்தல் விவகாரம்
, புதன், 15 ஜூன் 2016 (16:07 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் அமைதியாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆயத்த பணியை செய்ய தொடங்கி விட்டன.


 
 
வருகிற உள்ளாட்சி தேர்தலை திமுக, காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தே சந்திக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 12 மேயர் பதவிகளில் 3 மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
 
நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் 41 தொகுதிகளை பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது திமுகவில் அதிருப்தியை உருவாக்கியது. திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம் என்ற விவாதமே போனது.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மேயர் பதவிகளை பெற வேண்டும் என கணக்குப் போட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பு காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் 2 மேயர் பதவிகளுக்கு மேல் கொடுக்க கூடாது என முடிவில் இருப்பதாக தெரிகிறது.
 
சட்டசபை தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் தொகுதிகளை பெற்றது போல் இந்த முறையும் நாம் கேட்கும் பதவியை பெறலாம் என காங்கிரஸ் நினைத்தாலும், திமுக தரப்பு சட்டசபை தேர்தல் தோல்வியால் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்குமா என்பது சந்தேகமே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரடி தாக்கி மூன்று பேர் பலி : விறகு பொறுக்க சென்ற போது பரிதாபம்