Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:30 IST)
தஞ்சையில் நாளை நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தஞ்சையில் நவம்பர் 4ஆம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 52 வது தொடக்க விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெறும் என்றும் இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்திற்கு பதிலாக வரும் 16ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்குத்தப்பாக பெய்யும் மழை! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு..? தமிழகத்தில் இப்பவே மழை சீசனா?

குடையுடன் வெளியே போங்க.. இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடியுடன் மழை..!

மாதவிலக்கு விடுமுறை கேட்ட மாணவி.. உடையை அவிழ்த்து காட்ட சொன்ன ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments