Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: முன்னிலையில் அதிமுக; ஓவர் டேக் செய்யுமா திமுக?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (08:47 IST)
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிய்லும் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண துவங்கப்பட்டது.
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முதல் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. புதுவையில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும்  திமுக கூட்டணியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம் துவங்கப்பட்டாலும், முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments