Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விரைந்த புதுச்சேரி அதிமுகவினர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:22 IST)
புதுச்சேரியில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அதிமுகவினர் சென்னை விரைந்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகிய நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுனராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாளை நாராயணசாமிக்கு அவகாசம் அளித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுகவினரை உடனடியாக சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வர சொல்லி தகவல் வந்ததையடுத்து, அவர்கள் சென்னை விரைந்துள்ளனர்.

நாளை நம்பிக்கை தீர்மான நிறைவேற்றப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments