Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தற்கொலை செய்த தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அதிமுக அறிவிப்பு!

தற்கொலை செய்த தனுஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அதிமுக அறிவிப்பு!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:06 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது 
 
நீட் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை எழுதும் அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனுஷின் வீட்டிற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை அவருடைய பெற்றோர்களிடமும் அளித்தார் 
 
இந்த நிலையில் நேற்று ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று அதிமுக சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
 
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை