Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்ட அதிமுக நிர்வாகி..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:33 IST)
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதுராக பேசியதற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு கள்ளக்குறிச்சியில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு மனுத்தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பின் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்திய குமரகுரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments