Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் குறித்து சர்ச்சை பேச்சு.. அண்ணாமலை உருவ படத்தை எரித்த அதிமுகவினர்..!

Siva
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:48 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசிய அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் அவருடைய உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சாமி தவழ்ந்து சென்று பதவியை வாங்கினார் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அவருடைய உருவ பொம்மை பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் திடீரென அவருடைய உருவ பொம்மையை எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் கண்டித்தனர்
 
 தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, பச்சை இங்கில் பத்து ஆண்டு காலம் கையெழுத்து போட்ட என்னை பற்றி பேச தகுதி இல்லை என்று அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ: 50 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த சின்னசேலம் சாமியார்.. இப்போது சிறையில்..!

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments