Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியை துரோகி எனக் கூறிய அதிமுக பிரமுகர்! – கட்சியை விட்டு தூக்கிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (16:29 IST)
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அறிக்கை வெளியிட்ட அதிமுக பிரமுகர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

சசிக்கலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஏற்கனவே அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதை தொடர்ந்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பஷீர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments