பதவியை குறுக்கு வழியில் பெற இபிஎஸ் முயற்சி: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (17:33 IST)
பொதுச் செயலாளர் என்ற பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் வாதம் செய்தபோது, ‘ பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்றும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது என்றும் தெரிவிக்கப்பட்டது
 
அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் செய்து உள்ளார் என்றும் வாதிடப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை தொடரும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments