திமுகவுக்கு ஜம்ப் அடித்த அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (14:10 IST)
தமிழக நகர்புற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவிற்கு கட்சி தாவியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அதேசமயம் இந்த தேர்தலில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் பலர் பல்வேறு கட்சிக்கு தாவி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் 14வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக தமிழருவி என்பவரை அதிமுக அறிவித்திருந்தது. இவரை எதிர்த்து திமுகவிலிருந்து ஆம்பூர் திமுக நகர செயலாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழருவி இன்று தனது போட்டி வேட்பாளரான ஆறுமுகம் தலைமையில் திமுகவில் சென்று இணைந்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பாளரே கட்சி தாவியது அதிமுகவை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மறுநாள் வெளியாகும் OnePlus Pad 4.. விலை ரூ.59,999.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

17 நிமிடங்கள் சிசிடிவி அணைப்பு? தபால் வாக்குகள் முன்கூட்டியே பிரிப்பு? தேர்தல் ஆணையத்தில் திடுக் புகார்...!

நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.. நீட் தேர்வு.. 5,000 மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்..!

படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் லைப் ஜாக்கெட் கொடுத்தாங்க!.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!...

தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல!.. தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments