திமுகவுக்கு ஜம்ப் அடித்த அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (14:10 IST)
தமிழக நகர்புற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவிற்கு கட்சி தாவியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அதேசமயம் இந்த தேர்தலில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் பலர் பல்வேறு கட்சிக்கு தாவி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் 14வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக தமிழருவி என்பவரை அதிமுக அறிவித்திருந்தது. இவரை எதிர்த்து திமுகவிலிருந்து ஆம்பூர் திமுக நகர செயலாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழருவி இன்று தனது போட்டி வேட்பாளரான ஆறுமுகம் தலைமையில் திமுகவில் சென்று இணைந்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பாளரே கட்சி தாவியது அதிமுகவை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments