Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு ஜம்ப் அடித்த அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (14:10 IST)
தமிழக நகர்புற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவிற்கு கட்சி தாவியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

அதேசமயம் இந்த தேர்தலில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் பலர் பல்வேறு கட்சிக்கு தாவி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் 14வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக தமிழருவி என்பவரை அதிமுக அறிவித்திருந்தது. இவரை எதிர்த்து திமுகவிலிருந்து ஆம்பூர் திமுக நகர செயலாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழருவி இன்று தனது போட்டி வேட்பாளரான ஆறுமுகம் தலைமையில் திமுகவில் சென்று இணைந்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பாளரே கட்சி தாவியது அதிமுகவை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments