Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவில் சசி அண்ட் கோ இணைய வேண்டும்: மத்தியில் இருந்து வந்த குரல்!

அதிமுகவில் சசி அண்ட் கோ இணைய வேண்டும்: மத்தியில் இருந்து வந்த குரல்!
, புதன், 24 பிப்ரவரி 2021 (09:23 IST)
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை இன்று முடிவு செய்ய இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
தமிழகத்தில், அதிமுக சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றி பெறும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு நிச்சயம் நிறைவேறும். அதிமுகவுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கையை விற்ற ராமதாஸ் - வேல்முருகன் விளாசல்!